For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈழத் தமிழர்களுக்காகப் போராடுவேன் .. வைகோ

By Staff
Google Oneindia Tamil News

கும்பகோணம்:

இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக என் இறுதி மூச்சு வரை குரல் கொடுப்பேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

கும்பகோணம் ஆடுதுறையில் திருவிடை மருதூர் ஒன்றியச் செயலாளர் முருகன்-கீதா திருமணம் ஞாயிற்றுக்கிழமைநடந்தது.

திருமண விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், மதிமுக வில் உள்ள இளைஞர்கள் அனைவருமேலட்சியவாதிகள். லட்சியவாதிகளால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை. எதிர்காலத்தில் மக்களுக்காக மதிமுகஎவ்வளவோ செய்யத் திட்டமிட்டிருக்கிறது.

மதிமுக வில் உள்ள இளைஞர்கள் எம்.எல்.ஏ.ஆவோம் என்று எதிர்பார்த்து வரவில்லை. அவர்கள் அனைவரும்அண்ணாவின் கொள்கையை நிறைவேற்றவே என்னுடன் வந்துள்ளனர்.

உலகில் எத்தனையோ நாடுகள் உள்ளன. ஆனால் தமிழகத்திற்கு ஈடு, இணை கிடையாது. போராடுவதைத் தவிரஉரிமைகளைப் பெற முடியாது என்று யுத்த களத்தில் ஈழத் தமிழர்கள் இறங்கியுள்ளனர். ஆனால், உலகம் இதைவேறு கண்ணோட்டத்துடன் பார்க்கிறது.

பாலஸ்தீனத்துக்கு ஒரு பார்வை. ஈழத்துக்கு ஒரு பார்வையா? பாலஸ்தீனத்துக்கு என்ன உரிமை உள்ளதோ அதேஉரிமைதான் ஈழத்துக்கும் உள்ளது. நான் எல்லா தேசத்தையும் நேசிப்பவன்.

தமிழர்கள் அறிவாளிகள். தமிழ்நாட்டு இளைஞர்கள் டாக்டர்கள், இன்ஜினியர்கள், வக்கீல்கள் என்று படித்துவிட்டு, உலக அளவில் பிரபலமாக விளங்குகிறார்கள்.

ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகள் நம் நாட்டு இளைஞர்களை அழைத்துக் கொள்கிறார்கள். மதிமுக பொதுக்குழு கூடி விரைவில் தேர்தல் வேலைகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளோம் என்றார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X