கச்சத்தீவில் தமிழக மீனவர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர், இலங்கை கடற்படை அதிகாரியால் திங்கள்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்டார்.
ராமேஸ்வரம் போலீஸார் இதுகுறித்துக் கூறுகையில், திங்கள்கிழமை காலை தமிழக மீனவர் முனிசாமி (26) யும்,மேலும் 3 மீனவர்களும் மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்றனர்.
அப்போது, அங்கு இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர், இவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர்.அப்போது முனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 பேர் படகு மறைவில் மறைந்து தப்பித்துவிட்டனர்.
முனிசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications