அரசு ஊழியருக்கு 3 ஆண்டு கடுங்காவல்
Subscribe to Oneindia Tamil
கோவை:
வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கில் துணை வணிகவத் துறை அலுவலருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம்தீர்ப்பளித்தது.
கோவை வணிகவரித் துறையில் கடந்த 1983ம் ஆண்டு முபதல் 90ம் ஆண்டு வரை வணிகவரித் துறை துணை ஆணையராகப் பணியாற்றியவர் பி.கந்தசாமி. இவர்தனது பதவி காலத்தில் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்துள்ளார்.
புதிய வீடு, கார், நிலம் என வாங்கி குவித்த இவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரினை விசாரித்த கோவை குற்றப் புலனாய்வுத் துறை போலீசார்வழக்குப் பதிவு செய்தனர்.
கோவை முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கே.பி கே வாசுகி, வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த கந்தசாமிக்குமூன்றாண்டு கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications