கருணாநிதியை சந்தித்தனர் ராஜ்குமாரின் மகன்கள்
சென்னை:
வீரப்பனிடமிருந்து ராஜ்குமாரை மீட்டதற்காக தமிழக முதல்வர் கருணாநிதியை ராஜ்குமாரின் மகன்கள் நேரில்சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
சிவராஜ், ராகவேந்திரா, புனித் ஆகிய மூவரும் செவ்வாய்க்கிழமை மாலை சென்னை வந்தனர். நேராககோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்றனர்.
கருணாநிதியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், எங்கள் தந்தையை மீட்பதில் தமிழக முதல்வர்செய்த உதவிக்காக நன்றி தெரிவித்தோம். எங்கள் தந்தையை சந்திக்க முதல்வர் கருணாநிதியால் எப்போது நேரம்ஒதுக்க முடியும் என்பதையும் கேட்பதற்காகத் தான் வந்தோம்.
இப்போது தொடர்ந்து பல கோவில்களுக்கு சென்று வந்து கொண்டிருப்பதாலும் 20 நாட்கள் ஓய்வில் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாலும் தான் கருணாநிதியை சந்திக்க எங்களது தந்தை உடனடியாக வரமுடியவில்லை என்பதைத் தெரிவித்தோம்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன், நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோரையும் சந்தித்து நன்றிசொல்வோம் என்றனர்.
வீரப்பனைப் பிடிக்க அதிரடிப் படை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்க மூவரும்மறுத்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications