வக்கீலைத் தாக்கிய ஆட்டோ சங்கரின் கூட்டாளி
சென்னை:
கொலை வழக்கில் தூக்கிலிடப்பட்ட ஆட்டோ சங்கரின் கூட்டாளியான ஆட்டோ செல்வம், கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற வளாகத்தில் அரசு வக்கீலைதாக்கினார். இதையடுத்து ஆட்டோ செல்வம் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சென்னையைக் கலக்கிய தொடர் கொலைகள் வழக்கில் ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்டார். இந்த வழக்கில் ஆட்டோ மோகன், ஆட்டோசெல்வம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
இவர்கள் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்ததால், ஆட்டோ சங்கர் மீதான வழக்கு மட்டும் பிரித்து தனியாக நடத்தப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை நடத்த அரசு வக்கீலாக பழனிவேலு நியமிக்கப் பட்டார்.கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது .
வழக்கு விசாரணைக்காக கடந்த வாரம் ஆட்டோ செல்வம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும்பொழுது, அங்கிருந்த விசேஷ அரசு வக்கீல் பழனிவேலுவை ஆட்டோ செல்வம் தாக்கினார். இதனால் செஷன்ஸ் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்புஏற்பட்டது.












Click it and Unblock the Notifications