வி.பி. சிங், கவுடா மூப்பனாருடன் ஆலோசனை
சென்னை:
சென்னைக்கு வந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கும், தேவேகவுடாவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிதலைவர் மூப்பனாரை தனியாக சந்தித்து ஆலோசனைநடத்தினர்.
மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் செவ்வாய் கிழமை சென்னையில்
ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங்கும், தேவே கவுடாவும் விமானம் மூலம் சென்னை வந்தனர்.
அதே விமானத்தில் மூப்பனாரும் டெல்லியிலிருந்து சென்னை வந்தார். இவர்கள் மூவரும் சென்னை விமான நிலையத்தில் இருக்கும் வி.ஐ.பி.கள் அறையில்20 நிமிட நேரம் தனித்து ஆலோசனை நடத்தினர்.
கூட்டணி ஆட்சி அமைப்பது பற்றிய விஷயத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் த.மா.கா.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடைேயே மாறுபட்ட கருத்துகள்இருந்து வருகின்றன.
மூன்றாவது அணி அமைப்பது குறித்தும் பல கட்சி தலைவர்களும் ஆர்வம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த தலைவர்கள் சந்திப்பு முக்கியத்துவம்வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications