தமிழக மீனவர்களைக் காப்பாற்றுங்கள்: முதல்வர்
சென்னை:
தமிழக மீனவர்களைக் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி, பிரதமர் வாஜ்பாய்க்குசெவ்வாய்க்கிழமை கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த முனிசாமி என்ற தமிழக மீனவர் இலங்கை கடற்படை அதிகாரியால் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன்மீன் பிடிக்கச் சென்ற மேலும் 3 பேர் தப்பித்து விட்டனர்.
இதையடுத்து, தமிழக முதல்வர் கருணாநிதி, பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் இந்த மாதம் 27 ம் தேதி இலங்கைக்கடற்பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த மீன்பிடிப் படகு மீது துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் குண்டு பாய்ந்து இறந்துள்ளார்.
இது தமிழக மக்களிடம் ஆழ்ந்த கவலையையும், திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்கக்கூடாது. இலங்கைமீனவர்கள், இந்தியக் கடற்படைக்கு வந்தால்கூட, அவர்களைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகிறோம். இதே போல் அவர்களும்நடந்து கொள்ள வேண்டும்.
மாறாக மீனவர்களை சுட்டுக் கொல்வது நீதிக்கும், நியாயத்துக்கும் புறம்பான செயலாகும். எனவே இப்பிரச்சனையை இலங்கை அரசின் உயர்நிலைஅதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்து அப்பாவித் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவதைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர்.












Click it and Unblock the Notifications