சென்னை புயலில் 2 மீனவர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் ஏற்பட்ட புயல் மற்றும் மழையில் இரண்டு மீனவர்கள் பலியாகியுள்ளனர் என்று அஞ்சப்படுகிறது.

புயல் மழை காரணமாக தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன் ராயபுரம் பகுதியில் உள்ள மீனவர்கள் 15 விசைப் படகுகளில் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது புயல்காற்று வீசியது.

இதனால் படகு உடைந்து கடலில் மிதந்தது. இந்தப் படகில் இருந்த 6 பேர் அதிர்ஷ்வசமாக உயிர்தப்பினார்கள். 90 க்கும் மேற்பட்ட மீனவர்கள்இன்னும் கரை திரும்பவில்லை.

சென்னை மீனவர்கள்:

ராயபுரம் புது வண்ணார்பேட்டையைச் சேர்ந்த கன்னியப்பன் (45), அவரது மகன் லோகநாதன் (21) ஆகியோர் கட்டு மரத்தில் மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் மீன்பிடிக்கச் சென்ற போது சூறாவளிக் காற்று வீசியது. அப்போது கடல் அலைகள் 10 அடி உயரத்துக்கு மேல் எழும்பியது.

படகில் பயணம் செய்த தந்தை மகன் இருவரின் உடலும் பாறை மேல் மோதியது. இதில் இவர்கள் இருவரும் பலத்த காயமடைந்து கடலுக்குள் மூழ்கிஇறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+