தர்மபுரி பெண்கள் 2 பேர் பெங்களூரில் கற்பழிப்பு
பெங்களூர்:
தர்மபுரியிலிருந்து கூலி வேலைக்கு சென்ற 2 பெண்கள் 5 பேரால் கற்பழிக்கப்பட்டனர்.
கட்டிட வேலை செய்வதற்காக பெங்களூருக்கு வந்த இரண்டு பெண்கள் 5 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட கொடூர சம்பவம் பெங்களூரில் நடைபெற்றுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தின் தேன்கனிக் கோட்டையில் வசித்து வருபவர் வீரப்பா. இவர் கட்டிடத் தொழிலாளி. பெங்களூரில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்.
இவர் தர்மபுரியிலிருந்து கூலித் தொழிலாளிகளை பெங்களூருக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அது போல் ஒரு விதவைப் பெண்ணையும், அவரது தங்கையையும்கூலித் தொழிலுக்காக பெங்களூர் அழைத்துச் சென்றார்.
இவர்கள் காவேரிபுரா பகுதியில் குடிசை போட்டு தங்கியிருந்தனர். கடந்த செவ்வாய்கிழமை இரவு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது 5 பேர் கொண்டகும்பல் தூங்கிக் கொண்டிருந்த இரு பெண்களையும் பலாத்காரம் செய்தனர்.
இவர்களை தடுக்க வந்த வயதான தயாரை அடித்து விரட்டினர். இவர்கள் கூச்சலைக் கேட்டு அடுத்த குடிசையில் தங்கியிருந்த வீரப்பா ஓடி வந்தார்அவருக்கும் அடி விழுந்தது.
வீரப்பாவும் வயதான தாயாரும் உதவி கேட்டு கூச்சல் போட்டனர். இதைக் கேட்டு அருகில் வசிப்பவர்கள் உதவிக்கு வந்தனர். அவர்களைக் கண்டு 5பேரும் ஓட்டமெடுத்தனர். அவர்களை துரத்திச் சென்று இரண்டு பேரை பிடித்தனர். 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள் .
பிடிக்கப்பட்டவர்களை விசாரித் போது அவர்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களும் கட்டிடத் தொழிலாளிகள் என்பதும் தெரியவந்துள்ளது.