மாருதி உதயாக் ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்
டெல்லி:
மாருதி உதயாக் நிறுவனம் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டதாக வியாழக்கிழமை அறிவித்தது.
மாருதி உதயாக் தொழிலாளர்கள் சங்கத் தலைவர்கள் மாத்யூ ஆபிரகாம் இதை வியாழக்கிழமை உறுதிப்படுத்தினார். 4500 க்கும் மேற்பட்டதொழிலாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஜப்பானின் சுசூகி நிறுவனமும் இந்திய அரசும் இணைந்து மாருதி-சுசூகி கார் நிறுவனத்தை உருவாக்கின. இப்போது அனைத்துத் துறைகளையும்தனியார்மயமாக்கி வரும் மத்திய அரசு மாருதி நிறுவனத்தையும் முழுவதுமாக தனியாரிடம் விற்றுவிடத் திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து அரசிடம் உள்ள 50 சதவீத மாருதி நிறுவன பங்குகளை வாங்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த பங்குகளை தானே வாங்கிவிட சுசூகிநிறுவனம் நினைக்கிறது.
ஏற்கனவே இந்த நிறுவனத்திடம் மாருதியின் 50 சதவீத பங்குகள் உள்ளன. மீதி பங்குகளையும் வாங்குவதன் மூலம் இந்தியாவின் மாருதி கார் நிறுவனம்முழுவதுமாக சுசூகியின் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.
சுசூகி நிறுவனத்திலும் ஜெனரல் மோட்டர்ஸ் ஏற்கனவே முதலீடு செய்துள்ளது. சுசூகியின் 20 சதவீத பங்குகள் இப்போது ஜெனரல் மோட்டர்சிடம் தான்உள்ளது. இந்த இரு நிறுவனங்களுமே கிட்டத்தட்ட இணைந்து தான் செயல்பட்டு வருகின்றன.
இதனால், இந்த இரு கார் தயாரிப்பு நிறுவனங்களுமே இணைந்து மாருதியை வாங்க முயற்சிக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால், தனது பங்குகளை இந்தியஅரசு எப்படி விற்கப் போகிறது என்பதில் தான் இனி எல்லாமே அடங்கியிருக்கிறது. பங்குகளை மொத்தமாக ஒருவருக்கே விற்க இந்திய அரசு முன்வந்தால் ஜெனரல் மோட்டர்ஸ்-சுசூகி இணைந்து அதை வாங்கிவிடும்.
அப்படி இல்லாமல் தன்னிடம் உள்ள பங்குகளை பலருக்கு இந்திய அரசு விற்றால் அதை சுசூகியோ, ஜெனரல் மோட்டார்ஸோ அல்லது இருவருமேஇணைந்தோ வாங்குவார்களா என்பது சந்தேகமே.
இதற்கிடையே, அடுத்த சில மாதங்களில் மாருதி உதயாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படும். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 82 ஊழியர்கள் மீண்டும்வேலையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மேலும் அனைத்து ஊழியர்களும் மிகவும் நல்ல முறையில் நடத்தப்படுவார்கள் என்று மத்திய அரசுகூறியதையடுத்து மாருதி ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications