காஷ்மீர் பிரச்சனை: விரைவில் முஷாரப் - வாஜ்பாய் சந்திப்பு
துபாய்:
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப்பும், இந்திய பிரதமர் வாஜ்பாயும் ரம்ஜான் பண்டிகை முடிந்தவுடன் காஷ்மீர் பிரச்சனை நேருக்கு நேர் சந்தித்துப்பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பு டெல்லியில் நடக்கும். இரு நாட்டுத் தலைவர்களும் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரம்ஜானை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் போர்நிறுத்தம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் வாஜ்பாய். அதன் படி போர் நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
இதற்கிடையே காஷ்மீர் பிரச்சனைக்கு விரைவில் சுமூகத் தீர்வு காண பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப் ஆதரவு தெரிவித்தால் விரைவில்இரு நாட்டுத் தலைவர்களும் டெல்லியில் சந்தித்துப் பேசுவார்கள். வாஜ்பாயும், முஷாரப்பும் இதுவரை நேருக்குநேர் சந்தித்துப் பேசவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் பிரச்சனை குறித்து சமரசம் ஏற்படுத்த அதிக முயற்சி எடுத்து வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர் மன்சூர் இஜாஸ் கூறுகையில்,போர் நிறுத்தத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண முஷாரப் நினைத்தால் அவருக்கும், இந்தியபிரதமருக்கும் இடையே காஷ்மீர் பிரச்சனை குறித்த பேச்சுவார்த்தை நடக்கும்.
இது குறித்து முஷாரப்பிடம் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. அவர் போர் நிறுத்தத்தை வரவேற்றால் விரைவில் வாஜ்பாயும், அவரும் சந்தித்துப்பேசுவார்கள் என்றார்.