சீனாவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 100 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பீஜிங்:
தெற்குச் சீனாவில் உள்ள மிகப் பெரிய அடுக்கு மாடிக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில் 100 க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயேபலியானார்கள்.
இச்சம்பவம் சனிக்கிழமை அதிகாலை நடந்தது.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், க்வான்டாங்க் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் செங்கற்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த போது திடீரென்று கட்டிடம் இடிந்து விழுந்தது. இதையடுத்து இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட கட்டிடத்தொழிலாளர்கள் அனைவரும் மூச்சுத் திணறி இறந்தனர்.
சடலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த இடத்தில் ஷாப்பிங்க் காம்பிளக்ஸ் கட்டத் தீர்மானித்திருந்தது. கட்டிடம் பாதிக் கட்டிமுடிக்கப்பட்டிருந்த நிலையில் இருந்தது. சரியான அடித்தளம் அமைக்கப்படாததால் இவ்விபத்து ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications