இஸ்ரேல் தாக்குதலில் 4 பாலஸ்தீனியர்கள் பலி
காசா:
மேற்குக் கடற்கரை மற்றும் காசா பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இஸ்ரேல் ராணுவ வீரர்கள தாக்குதல்நடத்தியதில் 4 பாலஸ்தீனியர்கள் இறந்தனர்.
புனித ஸ்தலமான ஜெருசலேத்தைப் பிடிப்பதில் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும்இடையே போர் நடந்து வருகிறது. கடந்த 9 வாரங்களாக நடந்து வரும் இப்போரில் இதுவரை 291 பேர்இறந்துள்ளனர்.
இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்து வரும் போரில் முகமது அல் அர்ஜா என்ற 12வயது சிறுவன் கொல்லப்பட்டான். அல் சாமுவா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஹம்சக் நாடி ஹாசிஸ் (27) என்பவரும்கொல்லப்பட்டார்.
இதே போல் க்வாலன்டியா அகதிகள் முகாமில் உள்ள யாசின் முகமது (23) என்பவரும் கொல்லப்பட்டார்.இன்னொருவர் பெயர் விவரம் தெரியவில்லை. இச்சம்பவத்தில் 15 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள்காயமடைந்திருக்கலாம் என்று தெரிகிறது.
மேலும் பாலஸ்தீன நாட்டிற்குச் சொந்தமான சில கட்டிடங்களையும் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் வெடிகுண்டுவைத்துத் தகர்த்தாகவும் தெரிய வந்துள்ளது.
![]()












Click it and Unblock the Notifications