தமிழகத்தில் 6,000 எய்ட்ஸ் நோயாளிகள்
சென்னை:
தமிழகத்தில் மட்டும் 6560 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக எய்ட்ஸ் தடுப்பு பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி எய்ட்ஸ் மற்றும் காசநோய் தடுப்பு பயிற்சி முகாம் சென்னை கிண்டியில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அரங்கத்தில்நடந்தது.
மேயர் ஸ்டாலின் குத்து விளக்கு ஏற்றி பயிற்சி முகாமைத் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
21 ம் நூற்றாண்டு என்ற நவீன உலகை நோக்கி அறிவியல் வளர்ச்சி பெற்றிருக்கும் இந்த நேரத்தில் எய்ட்ஸ் என்னும் கொடிய உயிர்க்கொல்லி உலகையேஉலுக்கிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் மட்டும் சுமார் 37 லட்சம் மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 6560 பேர் எய்ட்ஸ் நோயால்பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கணக்கில் அறியப்பட்ட நோய்களில் 80 சதவீதம் பேர் பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்க நெறியைக் கடைபிடித்தால் எய்ட்ஸ் நோயிலிருந்து தப்பிக்கலாம். தமிழக மக்கள் எய்ட்ஸ் நோய் குறித்தான விழிப்புணர்வுடன்இருக்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.