எய்ட்ஸ் விழிப்புணர்வே என் குறிக்கோள்: பிரியங்கா
Subscribe to Oneindia Tamil
ல ண்டன்:
உலக அழிகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரியங்கா தனது உலக அழகி புகழை எய்ட்ஸ் விழிப்புணர்வுக்குபயன்படுத்துவேன் எனக் கூறியுள்ளார்.
உலகி அழகிப் பட்டம் வென்ற பின் நிருபர்களுக்கு பிரியங்கா சோப்ரா பேட்டி அளித்தார். அவர் பேட்டியில்கூறுகையில், நான் ஒரு மனோத்துவ நிபுணராக வேண்டும் என விரும்புகிறேன். அதுதான் எனதுஎதிர்காலலட்சியம்.
எனக்கு இந்திய இசை மிகவும் பிடிக்கும். நடனம் இயற்கையாகவே வரும். தற்கால நடனத்தை கற்றுக் கொள்ளநான் வகுப்பில் சேரந்து பயில இருக்கிறேன். இந்திய வட மாநில கிராம நடனத்தை கற்றுக் கொள்ள மிகவும்ஆர்வமாக இருக்கிறேன்.
பல கவிதைகள் எழுதி இருக்கிறேன். அவை பள்ளி, கல்லூரி புத்தகங்களில் மட்டும் தான் பிரசுரமாகி இருக்கின்றன.உலக அழகியாகி இருக்கும் என் புகழை எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக பயன்படுத்துவேன் என கூறினார்.












Click it and Unblock the Notifications