For Daily Alerts
Just In
கிருஷ்ணகிரியில் கடும் மழை
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பகுதிகளில் கடந்த இரு நாட்களாக பெரும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வந்தது. இந்த புயல் வியாழக்கிழமை கடலூர் அருகே கரையைக்கடந்தது.
இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி பகுதிகளில் இரு நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. புயல் கரையை கடந்த பின்பும் வெள்ளிக்கிழமையும்காற்றும் மழையும் தொடர்ந்தது. இதன் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, December 2, 2000, 5:30 [IST]