ரூ 300 கோடி வரி வசூல் செய்ய திருச்சி வருமானவரித்துறை திட்டம்
திருச்சி:
திருச்சி வருமானவரித்துறை அலுவலகம் இந்த ஆண்டு ரூ 300 கோடி வரை வருமான வரி வசூல் செய்வது என இலக்கு நிர்ணயித்துள்ளது.
திருச்சி வருமான வரி கமிஷனர் அலுவலகம் இந்த ஆண்டு ரூ 300 கோடி வரை வருமான வரி வசூல் செய்ய முடிவெடுத்திருக்கிறது.
இதுவரை ரூ 100 கோடி வரை வரி வசூல் செய்துள்ளதாகவும் திருச்சி வருமானவரித்துரை கமிஷனர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
அதிகமான வரி செலுத்துவோருக்கான சம்மான் விருது வழங்கும் விழாவில் பேசிய மூர்த்தி கூறியதாவது:
திருச்சி வருமான வரித் துறை நிர்ணயிக்கப்பட் இலக்கை அடையும் என்ற நம்பிக்கை உள்ளது. சென்ற ஆண்டு திருச்சி வருமான வரித் துறை ரூ 225 கோடி வரைமட்டுமே வரி வசூல் செய்துள்ளது.
திருச்சி,கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கூடலூர் மற்றும் பாண்டிச்சேரியை உள்ளடக்கிய நகரங்களில் 3லட்சம் வருமான வரி செலுத்துவோர் உள்ளனர் என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications