தமிழகத்தில் 10 மாதங்களில் 40, 000 விபத்துக்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை:

தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில், 38 ஆயிரத்து 727 விபத்துகள் நடந்துள்ளன. இதில், 7 ஆயிரத்து 459 பேர் இறந்துள்ளனர். விபத்துகள்பெரும்பாலானவை டிரைவர்களின் கவனக் குறைவால் நிகழ்ந்துள்ளன.

கோவையில் சாலைப் பாதுகாப்பு வார விழாவைத் துவக்கி வைத்து பேசிய தமிழ்நாடு போக்குவரத்துத் துறை இணை ஆணையர் சம்பத் பேசியதாவது:

கடந்த ஆண்டில் தமிழகத்தில் விபத்துக்கள் மூலம், 9 ஆயிரத்து 653 பேர் இறந்தனர். இதில் ஓட்டுநர்களின் கவனக் குறைவே மிகவும் அதிகமாக இருந்துவந்துள்ளது. இந்த ஆண்டு ,

தமிழகத்தில் கடந்த 10 மாத காலத்தில், 38 ஆயிரத்து 727 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 7 ஆயிரத்து 459 பேர் இறந்துள்ளனர்.

ஓட்டுநர்களின் கவனக் குறைவால், 7 ஆயிரத்து 234 பேர் இறந்துள்ளனர். விபத்துக்களை குறைக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

மேலும், மத்திய அரசின் உதவியுடன் டிரைவர்களுக்கென சிறப்பு பயிற்சிகாலத் திட்டம் ஒன்றை நிடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இதற்கு மத்திய அரசின்நதியுதவி கோரப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சி தென்னிந்திய அளவில் ஏற்படுத்தப்படும். கனரக வாகனங்களில் ஸ்பீடு கவர்னன்ஸ் எனப்படும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தவிரைவில் முடிவெடுக்கப்படும்.

தற்போது தமிழகத்தில் 49 லட்சம் வாகனங்கள் ஓடிக் கொண்டுள்ளன. இந்த வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையால், ஏற்படும் சுற்றுச் சூழலைக்கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

காரியமற்ற பெட்ரோல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டீசலில் சல்பரைக் குறைக்கும் முயற்சியும் மேற் கொண்டு வருகிறோம்.

தற்போதுள்ள சல்பரின் அளவான 0.25 சதவீதத்திலிருந்து 0.05 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தவிர, பெட்ரோல் ஆயில் கலந்த பெட்ரோலை பாக்கெட்டுகளில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற் கொண்டு வருகிறோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+