ஸ்பாட் ஃபைன் ரூ.10000.. பெண்கள் ரயில் பெட்டியில் ஏறும் ஆண்களுக்கு 2500 பைன்! அமலுக்கு வரும் சட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை ரயில் போக்குவரத்து மிக மிக அத்தியாவசியமாக மாறிவிட்டது.. லட்சக்கணக்கான மக்கள் ரயில்களை தினந்தோறும் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் பயணிகளின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. அந்தவகையில் இப்போது கூட ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்ன தெரியுமா?

நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களிலும், ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு புதிய சட்டத் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.

Railway

"ஜன் விஸ்வாஸ் திருத்த விதிகள் சட்டம், 2026"

"ஜன் விஸ்வாஸ் திருத்த விதிகள் சட்டம், 2026" என்ற இந்த புதிய விதிகள் வரும் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன. இந்த புதிய சட்டத்தின்படி, ரயில்களில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கான அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின் முக்கிய ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தப்பு செய்பவர்களுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கும் முழு அதிகாரம் ரயில்வே பாதுகாப்புப் படைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் விதிக்கும் அபராதத் தொகையை செலுத்த மறுத்தால், சம்பந்தப்பட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பெண்கள் பெட்டிக்கான புதிய விதிகள்:

அதேபோல ரயில்களில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் ஆண்கள் நுழைந்தால், இனி ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும். இந்த வழக்கு கோர்ட்டுக்கு போனால், அதிகபட்சமாக ரூ.5,000 வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.. நீதிமன்றத்தால் கூட இந்த அபராதத்தை ரூ.2,500-க்குக் கீழே குறைக்க முடியாது.

அதேபோல 2019ம் ஆண்டின் திருநங்கைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, பெண்கள் பெட்டியில் பயணிக்கும் திருநங்கைகளுக்கு இந்த அபராத விதிமுறைகளில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பெட்டியில் இருக்கும் ஆண் பயணியை அதிகாரிகள் இறங்க சொல்லியும் மறுத்தால், அவருடைய ரயில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டு, அவர் ரயிலில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்படுவார்.

சிறப்பு பெட்டிகள் - முன்பதிவு பெட்டிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகளில் தகுந்த ஆதாரம் இல்லாமல் சாதாரண பயணிகள் நுழைந்தால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்களுக்கும், எடுத்த டிக்கெட்டை விட அதிக தூரம் பயணிப்பவர்களுக்கும் இனி ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இன்னொருத்தரின் டிக்கெட்டை பயன்படுத்தி பயணித்தாலும் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும்.

முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அத்துமீறி நுழைந்தால் ரூ.2,000 அபராதமும், இடத்தை காலி செய்ய மறுத்தால் ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும். ரயில்களில் பிச்சை எடுப்பவர்கள் மற்றும் அனுமதியின்றி வியாபாரம் செய்பவர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.

சிகரெட் பிடித்தால் பைன்

ரயில்வே ஸ்டேஷன்களிலோ அல்லது ரயில்களிலோ சிகரெட் பிடித்தால் ரூ.2,000 அபராதம் வசூலிக்கப்படும். ரயில்வே ஊழியர்களின் வேலைக்கு தொந்தரவு செய்தால் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும். சிக்னல்களை மீறினால் ரூ.500 அபராதமும், அனுமதியின்றி ரயில்வே தண்டவாளப் பகுதிகளில் நுழைந்தால் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும்.

அதேபோல, ரயிலுக்குள் ஆபத்தான வெடிபொருட்களை கொண்டு வந்தால் ரூ.10,000 வரை அபராதம் வசூலிக்கப்படும். ரயில்களில் பயணிக்கும் சாதாரண மக்களின் பாதுகாப்பிற்காகவே இந்த கடுமையான விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதால், பயணிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து முறையாகப் பயணிக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது... செமல்ல!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+