“விஜய்யை அன்ஃபாலோ செய்த திரிஷா?.. உதயநிதியை மட்டும் ஃபாலோ செய்கிறாரா?” வெளிவந்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளில் நடிகை திரிஷா கிருஷ்ணன் வாழ்த்து தெரிவிக்காதது சமூக வலைதளங்களில் பெரிய பேச்சாக மாறியிருக்கும் நிலையில், அதைவிட வேகமாக பரவியது இன்னொரு தகவல். அது என்னவென்றால், "திரிஷா இன்ஸ்டாகிராமில் விஜயை அன்ஃபாலோ செய்துவிட்டாராம்... ஆனால் உதயநிதி ஸ்டாலினை மட்டும் ஃபாலோ செய்கிறாராம்!" என்பதுதான்.

இந்த ஒரு தகவலே தளபதி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்த, "இது என்ன புதுசா?" என்ற கேள்விகள் எக்ஸ், இன்ஸ்டா, பேன் பேஜ்கள் முழுக்க வெடிக்க ஆரம்பித்துவிட்டன.

ஆனால் இந்த விஷயத்தில் உண்மை என்ன? உண்மையிலேயே திரிஷா, விஜயை அன்ஃபாலோ செய்தாரா? அல்லது இது வழக்கமான சோசியல் மீடியா குழப்பமா? இந்த கேள்விகளுக்கு தற்போது அதற்கான பதில் தெளிவாகிவிட்டது.

Trisha Vijay Udhayanidhi Stalin

முதலில் பெரிய உண்மை

சமூக வலைதளங்களில் பரவியது போல திரிஷா, முதல்வர் விஜய்யை இன்ஸ்டாகிராமில் "அன்ஃபாலோ" செய்துவிட்டார் என்பது தவறான தகவல் என்கிறார்கள். காரணம் மிகவும் எளிது - திரிஷா விஜயை இன்ஸ்டாகிராமில் இதுவரை ஃபாலோ செய்ததே இல்லை. அப்படியிருக்கும்போது, அவர் எப்படி அன்ஃபாலோ செய்ய முடியும் என்ற கேள்விதான் இப்போது எழுகிறது.

அதாவது, "முன்னாடி ஃபாலோ பண்ணி இருந்தார்... இப்போ நீக்கிட்டாராம்" என்ற பேச்சு ரசிகர்களிடையே வேகமாக பரவினாலும், அதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. விஜயின் பிறந்தநாளில் திரிஷா எந்த போஸ்டும் போடாததை வைத்து, "அதனால்தான் அன்ஃபாலோ பண்ணிட்டாரா?" என்று சிலர் தாங்களாகவே கதையை உருவாக்கி பரப்பியிருக்கிறார்கள் போலத் தெரிகிறது.

உதயநிதியை ஃபாலோ செய்கிறாரா?

இதே சமயம், "விஜயை ஃபாலோ செய்யாத திரிஷா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை மட்டும் ஃபாலோ செய்கிறார்" என்ற தகவலும் பரவியது. ஆனால் அதிலும் முழு உண்மை இல்லை. இன்ஸ்டாகிராமில் திரிஷா, உதயநிதி ஸ்டாலினையும் ஃபாலோ செய்யவில்லை என்பதுதான் தற்போதைய நிலை.

இதில்தான் ரசிகர்கள் இன்னும் குழம்பி போயிருக்கிறார்கள். "அப்படியென்றால் இந்த செய்தி எப்படி கிளம்பியது?" என்ற கேள்வி எழுகிறது. காரணம், திரிஷா எக்ஸ் (Twitter) தளத்தில் உதயநிதி ஸ்டாலினை பின்தொடர்ந்து வருகிறார். அந்த தகவல்தான் இன்ஸ்டாகிராம் விவகாரத்துடன் கலந்து, "உதயநிதியை ஃபாலோ செய்கிறார்... விஜயை அன்ஃபாலோ செய்துவிட்டார்" என்ற முறையில் திரித்துப் பரப்பப்பட்டதாக தெரிகிறது.

ஏன் திரிஷா மௌனம்?

இந்த விவகாரம் இவ்வளவு பெரிதாக மாற காரணம் ஒன்று தான் - இந்த ஆண்டு விஜய்யின் பிறந்தநாளில் திரிஷா எந்த வாழ்த்து பதிவும் வெளியிடவில்லை. வழக்கமாக விஜயின் பிறந்தநாளில் ஒரு புகைப்படம், ஒரு சின்ன மெசேஜ், அல்லது குறைந்தபட்சம் ஒரு ஸ்டோரி என்றாவது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதுவும் இந்த முறை விஜய் சாதாரண நடிகர் இல்லை; தமிழக முதலமைச்சர். அதனால் திரிஷாவின் போஸ்ட் வரும் என காலையிலிருந்தே பலரும் காத்திருந்தார்கள்.

ஆனால் நாள் முழுவதும் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. திரிஷா எந்த வாழ்த்துப் பதிவும் போடவில்லை. அதுவே உடனடியாக இரண்டு கேள்விகளை கிளப்பியது, "இருவருக்கும் ஏதாவது பிரச்சனையா?", "அதனால்தான் திரிஷா இந்த முறை தள்ளி வைத்துக்கொண்டாரா?"
இந்த கேள்விகளுக்குள் தான் இப்போது "அன்ஃபாலோ" விவகாரமும் சேர்ந்து சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

Trisha Vijay Udhayanidhi Stalin

தற்போது இன்ஸ்டாகிராமில் திரிஷாவுக்கு கோடிக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர் பின்தொடர்பவர்களின் பட்டியல் மிகவும் குறைவானது. அதிலும் அவர் தன் படங்களில் நடித்த எல்லா ஹீரோக்களையும், இயக்குநர்களையும், நண்பர்களையும் கட்டாயம் ஃபாலோ செய்வது போன்ற பழக்கம் வைத்திருப்பதில்லை.

உதாரணமாக, சமீபத்தில் வெற்றி பெற்ற 'கருப்பு' படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியை அவர் ஃபாலோ செய்தாலும், அதே படத்தின் ஹீரோ சூர்யாவை ஃபாலோ செய்யவில்லை. இதுபோலவே பலரிடம் அவர் சமூக வலைதளத்தில் தள்ளி வைத்திருக்கிறார்.

அதனால், "திரிஷா யாரை ஃபாலோ செய்ய வேண்டும், யாரை செய்யக்கூடாது என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம்" என்பதையும் ரசிகர்கள் மறந்து விடக் கூடாது என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் சோசியல் மீடியா உலகத்தில், இப்படியான விஷயங்களே சில நேரங்களில் பெரிய அரசியல் சிக்னலாகவும், கிசுகிசு தலைப்பாகவும் மாறிவிடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+