டிச. 6 ல் தமிழகம் முழுவதும் போராட்டம்
சென்னை:
பாபர் மசூதி இடிக்கபட்ட நினைவு தினத்தன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தின் தலைவர்அறிவித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியில் இருக்கும் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் மாதம் 6-ம் தேதியன்று முஸ்லிம்கள்அதை நினைவு தினமாக அனுஷ்டித்து வருகிறார்கள். அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும் உண்டு.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி பாபர் மசூதி நினைவு தினத்தன்று தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடைபெறும் என தமிழக முஸ்லிம்ஜமாத்தின் தலைவர் ஆரூண் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் நிருபர்களிடம் கூறுகையில், சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்திற்கு எதிரில்போராட்டம் நடைபெறும்.
இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சித் தலைவர்களும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். பிற மாவட்டங்கள் தலைநகரிலும்அறப் போராட்டம் நடத்தப்படும் என அவர் கூறினார்.