சேலத்தில் போலி அடையாள வைத்திருந்தவர் கைது
சென்னை:
சேலத்தில் ஒருவர் போலி வாக்காளர் அடையாள அட்டை பெறப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டு கைது செய்யப்படடுள்ளார்.
இந்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வாக்காளர் பெயர் சேர்ப்புக்கு விண்ணப்பிக்க கடந்த 30-ம் தேதி வரை கால நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதன் படி விண்ணப்பம் செய்தவர்களின் படிவங்களை சரிபார்க்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
தேர்தல் கமிஷன் சார்பாக மாவட்ட வாரியாக குழுக்கள் அனுப்பப்பட்டு போலி அடையாள அட்டையை பரிசோதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையில் சேலம் சட்டசபை தொகுதியில் போலி அடையாள அட்டை வைத்திருந்த பச்சப்பட்டி ராம கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டத்தில் குணசேகரன், நடராஜன், ஞானம் ஆகிய 3 பேரும் போலி அடையாள அட்டை பெற முயன்றதால், அவர்கள் மீது கிரிமினல் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
மன்னார்குடியைச் சேர்ந்த ஆதிமுத்து அவரது தம்பி பெயரில் போலி அடையாள அட்டை பெற முயன்றதால், அவர் மீதும் கிரிமினல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் போலி அடையாள அட்டை பெற முயன்றால் அவர்கள் மேல் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே யாரும் அது போன்றமுயற்சியில் ஈடுபட வேண்டாம் என எச்சிரிக்கைப்படுகின்றனர் என கூறியுள்ளார்.