புலிகளுக்கும், தமிழக அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு?
கொழும்பு:
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும், இலங்கை விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து இலங்கை அரசின்உதவியுடன் புலனாய்வு நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
இது குறித்து இந்திய சிபிஐ அதிகாரிகள் மூன்று பேர், இலங்கை உயர் போலீஸ் அதிகாரிகளுடன் பேசினார்கள்.
அவர்கள் தமிழ் நாட்டிலுள்ள அரசியல்வாதிகளில் குறிப்பாக, வைகோ மற்றும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் ஆகியோருக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று அவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
மூன்று பேர் கொண்ட இந்த சிபிஐ குழு, இலங்கை போலீஸார், ராணுவ வீரர்கள், அட்டர்னி ஜெனரல் ஆகியோருடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளது.
இது குறித்து அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நிக்ஸன் என்ற விடுதலைப் புலியை விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
திடீரென்று அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த பிரபாகரன் அழைப்பு விடுத்திருப்பது குறித்தும் அவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications