டிச. 7 ல் சென்னையில் இருதய சிகிச்சை மாநாடு
சென்னை:
சார்க் நாடுகள் உள்பட 12 நாடுகளைச் சேர்ந்த இருதய மருத்துவ நிபுணர்கள் கலந்து கொள்ளும். இந்திய இருதயமருத்துவக் கழகத்தின் 52-வது மாநாடு சென்னையில் இந்த மாதம் துவங்குகிறது.
சார்க் நாடுகளின் இருதய சிகிச்சையில் புகழ் பெற்ற மருத்துவர்கள் கலந்து கொள்ளும் மருத்துவ மாநாடுசென்னையில் இந்த மாதம் 7-ம் தேதி துவங்குகிறது.
இது குறித்து மாநாட்டு அமைப்புச் செயலாளர் டாக்டர் ஜெயராஜ், டாக்டர் இளங்கோவன், டாக்டர் ஜே.எஸ் மூர்த்தி,டாக்டர் பாலகுரு ஆகியோர் சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்த மாநாடு 6 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடை பெறுகிறது. இந்தியாவின் புகழ் பெற்ற இருதய நோய்மருத்துவர்களும், அமெரிக்கா,லண்டன், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி நாடுகளிலிருந்து மருத்துவ நிபுணர்களும்இதில் கலந்து கொள்கின்றனர்.
இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய சார்க் நாடுகளிலிருந்து மருத்துவ நிபுணர்கள் உள்பட 3ஆயிரம் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
இந்த மாதம் 7-ம் தேதி சென்னையில் துவங்கும் இந்த மாநாட்டை தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார்.பொதுமக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் இந்த மாநாட்டை ஒட்டி நடைபெறுகிறது. இருதய நோய் சம்பந்தமானகேள்விகளுக்கு மருத்துவர்கள் பதிலளிப்பார்கள் என கூறினார்.