For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடற்படை தளபதிக்குக் கொலை மிரட்டல்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஒரு வருடமாக தனக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளதாக கடற்படை தளபதி சுசில் குமார் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

கடற்படை தளபதி சுசில் குமார் வீடு டெல்லி ராஜாஜி மார்க் பகுதியில் உள்ளது. அவரைக் கொல்லும் நோக்கத்தில் மர்ம மனிதன் ஒருவன் கடந்தவியாழக்கிழமை இரவு துப்பாக்கியுடன் சுசில் குமார் வீட்டு வளாகத்துக்குள் ஏறிக் குதித்தான்.

ஆனால் பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதால் அவன் தப்பியோடி விட்டான். மர்ம மனிதன் சுட்டதில் ஒருவர் காயம் அடைந்தார். இதுகுறித்து விசாரணை நடந்தது.

கொலை மிரட்டல்:

இதற்கிடையே தனக்கு ஒரு வருடமாக கொலை மிரட்டல் வந்ததாக சுசில் குமார் கூறியுள்ளார். என்னைப் போல் மிகப் பெரிய பதவிகளில்இருப்பவர்களுக்கு இதே போல் கொலை மிரட்டல் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாது.

கமாண்டோ வீரர்கள்:

சுசில்குமாரின் வீட்டுக்குள் மர்ம மனிதன் நுழைந்ததைத் தொடர்ந்து அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் மாற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக மும்பையில்இருந்து வரவழைக்கப்பட்ட கடற்படை கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X