For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹெலிகாப்டர் மூலம் வீரப்பனைத் தேட முடிவு

By Staff
Google Oneindia Tamil News

ரம்ஜான் நோன்பு காலத்தில் காஷ்மீரில் தீவிரவாதிகளுககு எதிரான தாக்குதல்களை நிறுத்தி வைக்கிறோம் - என்றுஇந்திய அரசு அறிவித்திருக்கிறது. சிவசேனையைச் தவிர, மற்ற எல்லா கட்சியினருமே இதைவரவேற்றிருக்கிறார்கள்.

காஷ்மீர் பிரச்சனைக்கு துப்பாக்கி மூலம் அல்லாமல் அமைதியான முறையில் தீர்வு காணவே இந்தியா விரும்புகிறதுஎன்பதையும் - பாகிஸ்தானால் தூண்டப்பட்டு, பல தீவிரவாத குழுக்கள் காஷ்மீரில் பல அராஜகங்களைப் புரிந்தும்கூட, இந்தியா நிதானமிழந்து விடாமால் ராஜரீக முயற்சிகளில் இறங்குகிறது என்பதையும் -- காஷ்மீர் பிரச்சனைக்குராணுவத் தீர்வையே இந்தியா நம்புவதாக பாகிஸ்தான் செய்கிற பிரச்சாரம் பொய் என்பதையும் காட்ட இந்ததாக்குதல் நிறுத்த அறிவிப்பு உதவும் என்று சிவசேனையைத் தவிர, மற்ற அனைத்துக் கட்சிகளும் நினைக்கின்றன.

இதுதவிர, காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா காட்டும் அணுகு முறைக்கு உலக அரங்கில் ஆதரவு கூடவும், இதுஉதவலாம். இப்படி பல கட்சிகள் நினைத்தாலும் சிவசேனை தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது.

அப்படியிருக்க இந்த தாக்குதல் நிறுத்தத்தை அறிவிக்க ரம்ஜானை தேர்ந்தெடுப்பானேன்? இந்தியாவின் இந்தமுடிவுக்குப் பிறகும், தீவிரவாதிகள் அங்கு கொலைகளைச் செய்யும் போது,எதற்காக இந்த தாக்குதல் நிறுத்தம்?இதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று கூறுகிறது.

சிவசேனை சொல்கிறது என்பதனாலேயே இது நிராகரிக்கத்தக்க கருத்தாகி விடாது. அனுபவ ரீதியாகப் பார்த்தால்,சிவசேனையின் கருத்தில் நிறையவே நியாயம் இருக்கிறது. பிரதமரின் லாகூர் பயணம் என்ற சமாதான முயற்சிக்கு -பாகிஸ்தான் அளித்த பதில் கார்கில் ஊடுறுவல்.

ஒரு தீவிரவாத குழு பேச்சு வார்த்தைக்கு முன்வந்தபோது, அதை இந்தியா ஏற்றதற்கு -தீவிரவாதிகள் பலர் அளித்தபதில் - கொலைகள். இப்படி அமைதித் தீர்வுக்கான முயற்சிகளையெல்லாம் புறக்கணித்து, மேலும் அராஜகம்புரிவதே தீவிரவாதிகளின் வழிமுறை என்கிற நிலையில், இப்போது வந்திருக்கிற தாக்குதல் நிறுத்த அறிவிப்புதேவைதானா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X