வீரப்பனைப் பிடிக்க ராணுவம் தேவையில்லை: ஜார்ஜ் பெர்னான்டஸ்
பெங்களூர்:
வீரப்பனைப் பிடிக்க எல்லைப் பாதுகாப்பு படையை அனுப்புவது என மத்திய அரசு எடுத்த முடிவு அதிருப்தி அளிப்பதாக உள்ளது என ராணுவ அமைச்சர் ஜார்ஜ்பெர்னான்டஸ் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் வந்திருந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வீரப்பன் பிரச்சனை போலீஸ் சம்பந்தப்பட்டது என ஏற்கனவே சொல்லி விட்டேன். முன்பு ஒரு முறை வீரப்பன், போலீஸ் பிடியில் சிக்கினார். அவர்கள்அவரைக் கைது செய்து காவலில் வைத்திருந்தனர்.
ஆனால் தற்போது வீரப்பன் என்ற தனிமனிதனுக்காக ராணுவத்தை அனுப்புவது புத்திசாலித்தனம் ஆகாது. வீரப்பனால் நாட்டுக்கே ஆபத்து என்ற நிலைவந்தால்தான் ராணுவத்தை அனுப்ப வேண்டும்.
அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படாத போது வீரப்பனைப் பிடிப்பதற்காக ராணுவத்தை அனுப்பது எனக்கு அதிருப்தி அளிப்பதாகவே உள்ளது என்றார் ஜார்ஜ்பெர்னான்டஸ்.
முன்னதாக, வீரப்பனைப் பிடிப்பதற்காக கர்நாடக, தமிழக அதிரடிப் படை வீரர்கள் காட்டுப் பகுதியில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.












Click it and Unblock the Notifications