கொடுக்கல் வாங்கல் தகராறில் காதைக் கடித்தவர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
ஆனைமலையில் கொடுக்கல் வாங்கல் தகராறில் காதைக் கடித்து துப்பியவரைப் போலீசார் கைது செய்தனர்.
ஆனைமலை வேட்டைக்காரன் புதூரைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன்(22) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்து வந்தது. இந்தப் பிரச்னையால் அடிக்கடி தகராறுஏற்பட்டது.
இந்நிலையில் திங்கள்கிழமை மாலை மணிகண்டனிடம் ஆறுச்சாமி பணம் கேட்டு வற்புறுத்தினார். இதனால்ஆத்திரமடைந்த மணிகண்டன், ஆறுச்சாமியின் காதைக் கடித்து துப்பினார்.
இது குறித்து ஆறுச்சாமி ஆனைமலைப் போலீசில் புகாார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்துமணிகண்டனைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications