பா.ஜ.க, புதிய நீதிக் கட்சியை விமர்சிக்க தேவையில்லை
ஈரோடு:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டளி மக்கள் கட்சிக்கு இடம் அளித்துள்ள பா.ஜ.க, எங்களை விமர்சிக்க தகுதிஇல்லை என புதிய நீதிக் கட்சியின் தலைவர் சண்முகம் தெரிவித்தார்.
ஈரோட்டில் புதிய நீதிக் கட்சியின் தொகுதி மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு சாமிநாத முதலியார் தலைமை வகித்தார்.மத்திய மாவட்ட செயலர் கோபால் வரவேற்றார். மாநாட்டில் கட்சி தலைவர் சண்முகம் பேசியதாவது:
அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய கட்சியாக புதிய நீதிக் கட்சி இருந்து வருகிறது. சில கட்சியில்தலைவர்கள் இருப்பார்கள் , தொண்டர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் எங்கள் கட்சியில் இருவருக்குமேபஞ்சமில்லை.
கடந்த நான்கு மாதங்களில் அபார வளர்ச்சி பெற்றுள்ளது புதிய நீதிக் கட்சி. அடுத்த சில நாட்களில் தமிழகத்தில்புதிய மாற்றம் வரும். தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளையும் மாறி மாறி ஆதரித்து மக்கள் சலித்து விட்டனர்.அடுத்த வாய்ப்பு எங்களுக்குத் தான்.
எங்களை ஜாதிக் கட்சி என பா.ஜ.க விமர்சனம் செய்து வருகின்றன. இரண்டு பேருக்குமே எங்களை விமர்சிக்கும்தகுதி இல்லை.
பாரதிய ஜனதா, பா.ம.க.,வை மந்திரி சபையில் சேர்த்துக் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறது. பெரியாரின்கொள்கைக்கு எதிராக ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்கி வருகிறார் வீரமணி என்றார்.












Click it and Unblock the Notifications