சுற்றுலாப் பயணிகளை கவரும் டால்பின்கள்
Subscribe to Oneindia Tamil
வேதாரண்யம்:
கோடியக்கரை கடலில் டால்பின் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. இது சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் சுமார் 15 கிலோ மீட்டர் பரப்பளவில் பசுமை மாறாக் காடுகள் உள்ளன.
இங்கு வெளிநாட்டுப் பறவைகள் மற்றும் புள்ளிமான்கள் அதிக அளவில் இருக்கிறது. ஆண்டு தோறும் சீசன் நேரத்தில் 256 வகைப் பறவைகள் இங்குவருகை தருகின்றன.
தற்போது கோடியக்கரை பகுதியில் அதிக அளவு டால்பின் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. தற்போது இந்தக் கடல் பகுதியில் ஏராளமான மீன்கள்தென்படுவதால் அவற்றை உண்பதற்காக இந்த சீசனில் டால்பின்கள் வந்துள்ளன.
டால்பின் மீன்கள் துள்ளி விளையாடுவதைக் கண்டுகளிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.












Click it and Unblock the Notifications