பிஜியில் தொடரும் பதட்டம்
சுவா:
தென் பசிபிக் நாடான பிஜித் தீவில் புரட்சிக் கும்பல் தலைவர் ஜார்ஜ் ஸ்பைட் மேல்பதிவு செய்யப்பட்ட வழக்கு முடிவுக்கு வரும் வரை தொடர்ந்து பதட்டம் இருக்கும்என்று கூறப்படுகிறது.
இதனால் பிஜித் தீவிற்கு நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பிஜித் தீவில் கடந்த மே மாதம் மகேந்திர செளத்ரி தலைமையில் ஆட்சி நடந்து வந்தது.செளத்ரி இந்தியர் என்பதால் பிஜியில் உள்ள கலகக் கும்பல் தலைவர் ஜார்ஜ் ஸ்பைட்தலைமையில் கலகக்காரர்கள் செளத்ரியை பிணைக்கைதியாகப் பிடித்து வைத்தனர்.
பிஜியின் பூர்வீகக் குடிமக்கள்தான் பிரதமர் மற்றும் அதிபர் பதவியில் இருக்கவேண்டும் என்று போராட்டம் நடத்தனர். இதையடுத்து ராணுவ வீரர்களுக்கும், கலகக்கும்பலுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
அதற்குப்பின் மகேந்திர செளத்ரி விடுவிக்கப்பட்டார். அதற்குப்பின் பிஜியில் தற்காலிகபிரதமர் பதவியில் அமர்த்தப்பட்டார். இந்த நிலையில் கலகக் கும்பல் தலைவர் ஜார்ஜ்ஸ்பைட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஸ்பைட் மற்றும் 13 பேர் மீது தேசவிரோத வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தற்போதுபிஜியில் சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டம் பெருமளவில் குறைந்து வருகிறது.
ஜார்ஜ் ஸ்பைட்டின் வழக்கு தலைநகர் சுவாவில் விசாரணைக்கு வந்த போது அவரதுஆதரவாளர்கள் கோர்ட் முன் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் ஜார்ஜ் ஸ்பைட்வழக்கு முடியும் வரை பிஜித்தீவில் தொடர்ந்து பதட்டம் இருக்கும் என்றுகூறப்படுகிறது.
இதற்கிடையே நியுசிலாந்து சுற்றுப்பயண ஆலோசகர் ஒருவர் கூறுகையில், பிஜியில்வெளிநாடுகள் பல முதலீடு செய்து வருகின்றன. இங்கு தொடர்ந்து பதட்டம் நடந்துவருவதால் அந்நிய முதலீடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.