மாவட்டச் செயலாளர்களுக்கு கருணாநிதி அறிவுரை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எதிர்க்கட்சிகளின் விஷமனத்துக்கு இடம் கொடுக்காமல் ஜனநாயக உணர்வவோடு செயல்படுமாறு தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர்கருணாநிதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திங்கள்கிழமை அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதற்கு முதல்வர் தலைமை தாங்கினார். அந்த கூட்டத்திற்கு பிறகுநிருபர்களுக்கு முதல்வர் பேட்டியளித்தார். பேட்டியின் போது அவர் கூறியதாவது:

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வாக்காளர்கள் பட்டியலில் பெயர்களை சேர்ப்பது, புகைப்படம் எடுப்பதுஆகியவற்றில் மோசடி நடந்துள்ளதாக அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர் கட்சியினர் புகார் கூறியிருந்தனர்.

அ.தி.மு.க.வினர் தங்கள் தவறுகளை மறைக்க புகார் கூறியுள்ளனர். கோவை வாக்காளப் பட்டியலில், கோவை மாவட்ட தி.மு.க. மாவட்டச் செயலாளர்சி.டி. தண்டாயுதபாணியின் பெயரும், அவரது குடும்பத்தினர் பெயரும் நீக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினரும் பார்ம் - 7 கொடுத்திருந்தனர்.

இதனால் அவர்கள் பெயர் நீக்கப்பட்டது. சரியான நேரத்தில் தி.மு.க. நிர்வாகிகள் இந்த தவறை கண்டு பிடித்து சுட்டிக் காட்டியதால் அந்த தவறு சரிசெய்யப்பட்டது.

ஆளும் கட்சியினர் மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர் எதிர்க்கட்சிகளின் இந்த விஷமத்தனத்துக்கு இடம் தராமல் ஜனநாயகஉணர்வோடும், நடுநிலையாகவும் செயல்படுமாறு கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+