இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா வெற்றி
அகமதாபாத்:
இந்திய -ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒரு நாள் போட்டியில்இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கும் - ஜிம்பாப்வேக்கும் இடையே இரண்டாவது ஒரு நாள் போட்டிஅகமதாபாத்தில் இருக்கும் மொட்டேரா விளாையாட்டு அரங்கில் செவ்வாய்கிழமைநடைபெற்றது.இதில் இந்தியா ஜிம்பாப்வேயை 61ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய - ஜிம்பாப்வே நாடுகளுக்கிடையே ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள்நடைபெற்று வருகின்றன. முதல் போட்டியில் இந்தியா ஜிம்பாப்வேயை மூன்றுவிக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில் அகமதாபாத்தில் நடந்தஇரண்டாவது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. துவக்கஆட்டக்காரராக அணித்தலைவர் கங்குலியும், டெண்டுல்கரும் களமிறங்கினர். ஆனால்அணியின் ஸ்கோர் 22 ஆக இருந்த போது டெண்டுல்கர் ஆட்டமிழந்தார். அதற்கு பின்ராகுல் டிராவிடும், கங்குலியும் சிறப்பாக ஆடினர். அணியின் ஸ்கோர் 197 ஆக இருந்தபோது ராகுல் டிராவிட் ரன் அவுட் ஆனார். அவர் 62 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்திய அணியின் தலைவர் கங்குலி 144 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 50ஓவர்களில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்திருந்தது.
ஜிம்பாப்வே தரப்பில் ஒலோங்கோ 10 ஓவர்களில் 59 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைகைப்பறினார். ஃப்ரெண்ட் 10 ஓவர்களில் 37 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைகைப்பற்றினார். விலியோன் 7 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைகைப்பற்றினார். மரிலியர் 5 ஓவர்களில் 44 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைகைப்பற்றினார்.
இதையடுத்து 307 ரன்களை இலக்காக கொண்டு ஜிம்பாப்வே களமிறங்கியது. துவக்கம்முதலே ஜிம்பாப்வே விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. அவர்களால்இந்தியாவின் சிறப்பான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. 50 ஓவர்களில்8 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2-0 என்றுமுன்னணியில் இருக்கிறது.
இந்தியத் தரப்பில் ஜாகீர்கான் 6 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைகைப்பற்றினார்.வெங்கடேஷ் பிரசாத் 6 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 1விக்கெட்டை கைப்பற்றினார்.டெண்டுல்கர் 10 ஒவர்களில் 53 ரன்கள் கொடுத்து 1விக்கெட்டை கைப்பற்றினார்.சுனில் ஜோஷி 8 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 2விக்கெட்டை கைப்பற்றினார்.ஸ்ரீராம் 7 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்து 3விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
144 ரன்கள் எடுத்த இந்திய அணித்தலைவர் கங்குலி இன்றைய ஆட்டத்தின் சிறந்தஆட்டக்காரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications