For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

50-வது குடியரசு தினத்தையொட்டி புது தபால் தலைகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இந்திய தபால் துறை இந்தியாவின் 50-வது குடியரசு தின விழாவை கொண்டாடும் விதமாக 6 புதிய தபால்களை வெளியிட இருக்கிறது.

டிசம்பர் மாதம் 7-ம் தேதி இந்த தபால் தலைகள் கல்கத்தாவில் நடைபெற இருக்கும் இந்திய-ஆசிய சர்வதேச தபால் தலை கண்காட்சியின் போதுவெளியிடப்படும்.

இந்தியா குடியரசு நாடாகி 50 வருடம் நிறைவடைகிறது. இதை சிறப்பிக்கும் விதமாக இந்த தபால் தலைகள் வெளியிடப்படுகின்றன.

இது குறித்து திங்கள் கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தபால் தலைகள் ஒவ்வொன்றின் விலையும் ரூ 3 என கூறப்பட்டுள்ளது. தபால் தலையின்முதல் கவர் (ஃபர்ஸ்டே கவர்) விலை ரூ 2 ஆகும்.

முதல் தபால் தலையில் சிந்து சமவெளி காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டு கல்களைக் கொண்டு செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டநெக்லஸ்களின் படம் பொறிக்கப்பட்டிருக்கும்.

இரண்டாவது தபால் தலையில் முகாலயர் காலத்தில் செய்யப்பட்ட கலையுணர்வு மிக்க தங்க நகைகளின் படம் பொறிக்கப்பட்டிருக்கும.

மூன்றாவது தபால்தலையில் விலை உயர்ந்த கற்களின் படம் பொறிக்கப்பட்டிருக்கும். நான்காவது தபால் தலையில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்தநெக்லேசின் படம் பொறிக்கப்பட்டிருக்கும்.

19-ம் நூற்றாண்டில் இந்தியாவில் திருமணத்திற்காக பயன்படுத்தப்பட்ட தாலியும், 18-ம் நூற்றாண்டில் கோவிலில் பயன்படுத்தப்பட்ட நகைகளும்ஐந்தாவது மற்றும் ஆறாவது தபால் தலையில் பொறிக்கப்பட்டிருக்கும்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X