2 வயது குழந்தைக்கு பேஸ் மேக்கர்: மதுரை டாக்டர்கள் சாதனை
மதுரை:
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டரை வயதுக் குழந்தைக்கு பேஸ் மேக்கர் கருவிபொருத்தி இருதய துடிப்பை சரி செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ராயவேலு பாலக் கொம்பை என்ற கிராமத்தை சேர்ந்தவர்தங்கமணி மற்றும் பேபி.
இவர்களது இரண்டரை வயது மகன் பிரவீன்ராஜ். இந்தக் குழந்தைக்கு பிறந்தது முதல் எட்டு மாதம் வரைநிமிடத்திற்கு முப்பது முதல் நாற்பது முறை வரை இருதய துடிப்பு இருந்தது. ப்ரவீன்ராஜூக்கு சில நேரங்களில்இருதய துடிப்பே இல்லாமலும் இருக்கும்.
சுயநினைவு இருக்காது:
அப்பொழுது ப்ரவீன்ராஜ் சுயநினைவை இழந்து கால், கைவலிப்பு போன்றவற்றால் அவதிப்பட்டான். இதைத்தொடர்ந்து ப்ரவீன்ராஜ் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
குழந்தைகள் நலப்பிரிவு டாக்டர் கண்ணன் பரிசோதனை செய்து இருதய நோய் சிகிச்சை பிரிவுக்கு அனுப்பினார்.
அங்கு மீண்டும் பரிசோதனை செய்ததில், இருதய பகுதிக்கு செல்லும் மின்சார உணர்வு சரியாக செல்லாததும்,இருதயத்தின் அருகில் டக்டஸ் ஆர்டியோசஸ் என்ற இணைப்பு ரத்தக்குழாய் அடைபடாமல் உள்ளது என்றும்கண்டு பிடிக்கப்பட்டது.
பேஸ் மேக்கர்:
இதையடுத்து, இருதயத்தை செயற்கை முறையில் செயல்பட வைக்கும் பேஸ்மேக்கர் கருவியை குழந்தைக்குப்பொருத்தி அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்கள் சுகுமார், மணிமாறன் மற்றும் கேசவமூர்த்தி ஆகியோர், முதலில்குழந்தையின் தொடையில் உள்ள ரத்தக்குழாயின் வழியாக தற்காலிக பேஸ் மேக்கரை பொருத்தி இருதய துடிப்பைசரி செய்தனர். பின்னர் நிரந்தர பேஸ்மேக்கர் கருவியை நெஞ்சு பகுதியில் பொருத்தி துடிப்பை அதிகப்படுத்தினர்.
பின்னர் இணைப்பு ரத்தக்குழாயை அடைக்க அறுவை சிகிச்சை செய்தனர். இது போன்ற சிகிச்சை லட்சத்தில் ஒருகுழந்தைக்குத்தான் ஏற்படும். இந்த சிகிச்சையால் பிரவீன்ராஜூக்கு 25 ஆண்டுகளுக்கு இருதயத்தில் எந்தவிதபிரச்சனையும் ஏற்படாது.












Click it and Unblock the Notifications