போரினால் கடும் நிதி நெருக்கடியில் இலங்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப் புலிகளுடன் போரில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசு ராணுவத்துக்கும், ஆயுதங்களுக்கும் பெரும் அளவில் பணத்தைசெலவழித்து வருவதால் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இந்த ஆண்டுக்கு ரூ. 52.43 பில்லியனை ராணுவத்துக்காக இலங்கை ஒதுக்கியது. ஆனால், செலவு ரூ. 83 பில்லியனைத்தொட்டுவிட்டது என பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் பெய்ரிஸ் கூறினார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டைதாக்கல் செய்த அவர் இதனைத் தெரிவித்தார்.

யாழ்பாணத்துக்கு ஆயுதங்கள் அனுப்பவும், படையினரை அங்கே தங்க வைக்கவும் பெரும் அளவில் பணம் செலவாகிறதுஎன்றார்.

இதையடுத்து பல நிதி அமைப்புகள், வங்கிகளிடமிருந்தும் அரசு பணத்தை கடன் வாங்கி வருகிறது. இதனால், நாட்டில் பெரும்நிதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிதி குறைவாக இருப்பதால் வட்டி 12 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.இதனால் கடன் வாங்கி தொழில் நடத்தும் தனியார்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரலில் கடும் தாக்குதலைத் தொடங்கிய புலிகள் யாழ்பாணத்தை மீண்டும் கைப்பற்ற தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

இதையடுத்து அரசின் அனைத்து நிதியையும் ராணுவத்துக்குத் திருப்பிவிட்டார் சந்திரிகா குமாரதுங்கா. போர் நிதிக்காக வரிகள்உர்த்தப்பட்டன, பணத்தின் மதிப்பைக் குறைத்தார். ஆனாலும் பற்றாக்குறையை போக்க முடியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+