For Daily Alerts
Just In
அமைச்சர்-புலிகள் தொடர்பு: சர்ச்சை தொடர்கிறது
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி கூட்டுறவுத் துறை அமைச்சர் தேனி.ஜெயக்குமாருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு உள்ளது என்று பொதுப்பணித் துறை அமைச்சர்கண்ணன் கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று தமிழ் மாநில காங்கிரஸ் பாண்டிச்சேரி பிரிவு தலைவர் பாலாஜி தெரிவித்தார்.
அவரும், செய்தித் தொடர்பாளர் பாலனும் நிருபர்களிடம் கூறியதாவது:
தேனி ஜெயக்குமாருக்கு, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருக்கிறது என்று கண்ணன் கூறியது ஆதாரமற்றது. தேவையில்லாதது.
நிஜமாகவே அமைச்சருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருந்தால் கண்டிப்பாக கண்ணன் அதற்கான ஆதாரங்களை முதல்வர் சண்முகத்திடமும்,டிஜிபியிடமும் காண்பித்திருக்க வேண்டும்.
இது குறித்து அனைத்து விதமான விசாரணைக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் ஒத்துழைப்பு நல்கும். ஏனெனில் உண்மையான குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்என்றனர்.
யு.என்.ஐ.
Story first published: Monday, May 8, 2000, 5:30 [IST]