For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூடான்: மசூதியில் 20 பேர் சுட்டுக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

கெய்ரோ:

சூடான் நாட்டில் தலைநகர் கார்டோமின் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் கும்பல் ஒன்று கண் மூடித்தனமாகச் சுட்டதில் 20 பேர் சம்பவ இடத்திலேயேஇறந்தனர். 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆனால் பத்திரிக்கைகளில் 30 க்கும் மேற்பட்டோர் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டிருக்கலாம். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம்என்று பிரசுரமாகியுள்ளது.

அதே பகுதியில் வசித்து வரும் அல் தாக்பீர் வா அல் ஹிஜ்ரா முஸ்லீம் அமைப்பினர்தான் இத்தாக்குதலில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்றும் தெரியவந்துள்ளது.

பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் அல் தாக்பீர் பிரிவின் தலைவரான அப்பாஸ் பாக்கீரைப் போலீஸார் தேடி வந்தனர். தலைநகர் கார்டோமினின் அருகேநடமாடிக் கொண்டிருந்த அவரைக் கைது செய்வதற்காகப் போலீஸார் அவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர்.

உடனே, அப்பாஸின் ஆதரவாளர்கள் அங்கு கூடி விட்டனர். இதையடுத்து இன்னொரு முஸ்லீம் அமைப்பான அல் சார் அன்சுன்னா பிரிவினர் தொழுகை நடத்திக்கொண்டிருந்த முஸ்லீம்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இச்சம்பவத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இதற்கிடையே அடுத்த வாரம் சூடானில் அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X