தீவிரவாதிகளுக்கு திமுக அரசு ஆதரவு: காங்கிரஸ் புகார்
சென்னை:
கருணாநிதி அரசு தீவிரவாதிகளுக்கு உதவியாக செயல்பட்டு வருவதால், அந்த அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்இளங்கோவன் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழக விடுதலை முன்னணி என்ற அமைப்பு வெப்சைட் அமைத்துள்ளது. இது நம் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு விடப்பட்டிருக்கும் சவாலாகும். தமிழக, கர்நாடக,கேரள எல்லைகள் மற்றும் இலங்கையின் ஒரு பகுதியை இணைத்தும் அகண்ட தமிழகம் என்ற பெயரில் அந்த வெப்சைட்டில் வரைபடம்கொடுக்கப்பட்டிருக்கிறது.
முதல்வர் கருணாநிதியே வீரப்பனை தமிழ் உணர்வு உள்ளவர் என பாராட்டியுள்ளார். தீவிரவாதிகள் வளர்வதற்கு இதுவும் காரணமாகும். எனவேதீவிரவாதிகளுக்கு ஊக்கம் அளித்து வரும் கருணாநிதி அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டால் அதைகாங்கிரஸ் கட்சியினர் கிழித்து எறிவார்கள்.
பாபர் மசூதி இடிப்பு:
பாபர் மசூதி இடிக்கபட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியமூன்று பேரும் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்.
அ.தி.மு.க. வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சேடப்பட்டி முத்தையா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடர்ந்த போதுஅவரை ராஜினாமா செய்யச் சொன்னதும் அவர் ராஜினாமா செய்தார்.அதே போல் பூட்டா சிங்கும் ராஜினாமா செய்தார்.
மற்ற கட்சியினரை ராஜினாமா செய்யச் சொன்ன வாஜ்பாய் இவர்கள் மூவரையும் ராஜினாமா செய்யச் சொல்லாதது எந்த வகையில் நியாயம்.இவர்கள் மூவரும் ராஜினாமா செய்யாவிட்டால் நாடாளுமன்றத்தில் போராடும் காங்கிரஸ் கட்சி தெருக்களில் நின்று போராடும்.
விவசாயிகள் பிரச்சனை
தமிழகத்தில் தேயிலை, தென்னை மற்றும கரும்பு விவசாயிகளின் பிரச்சனை குறித்து நான் சோனியா காந்தியிடம் விவரித்துள்ளேன். சோனியா காந்தி எனக்குபதிலாக வேறு யாரையாவது தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக நியமித்தால் அவரை நான் தலைவராக ஏற்று செயல்படுவேன் என இளங்கோவன்கூறினார்.












Click it and Unblock the Notifications