குருவாயூர் கோவில் காணிக்கை ஸ்டேட் பாங்கில் முதலீடு
குருவாயூர்:
குருவாயூர் கோயிலுக்குச் சொந்தமான 300 கிலோ தங்கம், ஸ்டேட் பாங்கில் முதலீடு செய்யப்பட்டது. இதனால் கோயிலுக்கு ஆண்டுக்கு 30 லட்ச ரூபாய்வட்டியாக கிடைக்கவுள்ளது.
திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு அடுத்தபடியாக பணக்கார சாமிகளில் உயர்ந்து நிற்பவர் குருவாயூரப்பன். இந்தக் கோயிலுக்கு மட்டும் ஆண்டுமுழுவதும் சீரான வருமானம் வந்து கொண்டே இருக்கும்.
பக்தர்கள் தங்கம் வெள்ளி உட்பட பல்வேறு பொருட்களைக் காணிக்கையாக்கி வருகின்றனர். இவ்வாறு காணிக்கையாக வந்த பொருட்களில்தங்கமாக 300 கிலோ சேர்க்கப்பட்டுள்ளது.இந்த தங்கம் தற்போது ஸ்டேட் பாங்க்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு ஆண்டுக்கு ரூ. 30 லட்ச ரூபாய் வட்டியாக கிடைக்கவுள்ளது. இந்த வட்டியைக் கொண்டு பக்தர்களுக்கு தேவையான தங்கும் இடம், திருமணமண்டபம் உட்பட அடிப்படை வசதிகள் மேற் கொள்ளப்படவுள்ளன. இந்த தகவலை குருவாயூர் தேவஸ்தான அதிகாரி வேணுகோபல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications