இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு
மும்பை:
நடப்பு நிதியாண்டின் 6 மாத காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 22 சதவிகிதம்உ.யர்ந்துள்ளது.
தாதுப் பொருட்களின் ஏற்றுமதி 49.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதே சமயம்பொறியியல் சம்பந்தப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி 30 சதவிகதம் உயர்ந்துள்ளது.
மின்னணு பொருட்கள், தோல் பொருட்கள், துணி வகைகள், நகைகளின் ஏற்றுமதிமுறையே 27.3 சதவிகிதம, 25.4 சதவிகிதம், 19.5 சதவிகிதம், 8.3 சதவிகிதமாகஇருக்கிறது.
ஏற்றுமதியின் உயர்வுக்கான காரணம் ஏற்றுமதியாளர்களின் முழு முயற்சியேயாகும்.வர்த்தக அமைச்சகத்தின் தாராளமயமாக்கல் கொள்கையும் ஏற்றுமதியை அதிகமாக்கஉதவியது என ஏற்றுமதியாளர்கள் கழகத்தின் தலைவர் நவரத்தன் சாமித்திரியாகூறினார்.
பிரபல பொருளாதார வல்லுநர் டாக்டர் அடுல் சூத் தெரிவிக்கையில், ஏற்றுமதியின்உயர்வுக்கு காரணம் அமெரிக்காவின் தொடர்ந்த பொருளாதார விரிவாக்கமும் உலகஅளவில் வணிகம் வளர்ந்து வருவதுமேயாகும்.
கடந்த 10 ஆண்டுகளின் இந்தியாவை ஏற்றுமதியைப் பார்க்கும் போது இந்தியாவின்தலைசிறந்த 3 ஏற்றுமதிப் பொருட்களில் எந்த மாற்றமும் இல்லை. 1993-94-ம்ஆண்டில் இருந்ததைப் போலவே 1999-2000-லும் நவரத்தின கற்கள், நகைகள்,ரெடிமேட் ஆடைகள் போன்றவையே ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
நாம் முன்பு ஏற்றுமதி செய்த பொருட்களையே இப்போதும் ஏற்றுமதி செய்கிறோம்.தாராளமயமாக்கலால் ஏற்றுமதியின் அளவு அதிகரித்திருக்கிறது.
ஏற்றுமதியை அது எந்த அளவிற்கு நமது நாட்டிற்கு வருமானத்தை ஈட்டித் தருகிறதுஎன்பதைக் கொண்டு மதிப்பிட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications