பாதுகாப்பு வேண்டி இலங்கை அரசுக்கு டாக்டர்கள் மிரட்டல்
கொழும்பு:
சர்வதேச சங்கங்கள் அல்லது செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் பாதுகாப்பான போக்குவரத்து வசதி செய்து கொடுக்காவிட்டால் மட்டக்களப்பை விட்டுவெளியேறுவோம் என்று அங்கு பணிபுரியும் 400 க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அரசு மருத்துவச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகமிருக்கும் இலங்கையின் கிழக்குப் பகுதியான திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் உள்ள அரசுமருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கில் டாக்டர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களில் 54 டாக்டர்கள் ஏற்கனவே மட்டக்களப்பை விட்டு வெளியேறி விட்டனர். இவர்கள் தங்களுக்குப் போதிய போக்குவரத்து வசதியைஏற்படுத்தித் தந்தால் தான் மட்டக்களப்பில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவோம் என்று கூறியுள்ளனர்.
அரசு மருத்துவச் சங்கத் தலைவர் விமல் ஜெயந்தா கூறுகையில், மன்னார், அம்பாரா, கல்முனை, அக்கரைப்பட்டு மற்றும் வவுனியா பகுதிகளில் பணிபுரிந்துவரும் டாக்டர்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். இல்லையேல் தலைநகர் கொழும்புக்குச் சென்று விடுவோம்என்று கூறியுள்ளனர்.
சமீபத்தில் மட்டக்களப்பில் டாக்டர்கள் சென்ற பஸ் கண்ணிவெடியில் சிக்கித் தகர்ந்தது. இதில் 3 டாக்டர்கள் உயிரிழந்தனர். இப்பகுதிகளில் வாழும்டாக்டர்கள் ஒவ்வொரு நிமிடமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ வேண்டிய அபாயம் உள்ளது.
இதனால், சர்வதேச பாதுகாப்பு சங்கம் அல்லது செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் இலங்கை அரசு எங்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் சங்கம் முடிவெடுத்திருப்பதாக அவர் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications