வீரப்பனைப் பிடிக்க பி.எஸ்.எப். படை கமாண்டர் நியமனம்
கோவை:
வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள எல்லைப் பாதுகாப்பு படைக்கு கமாண்டராக ஜார்ஜ் சாக்கோ செயல்படுவார் எனஎல்லைப் பாதுகாப்பு படையின் டி.ஐ.ஜி. பீட்டர் தெரிவித்தார்.
சூலூர் விமானப் படைத் தளத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களை அழைத்துச் செல்ல எல்லைப் பாதுகாப்பு படையின்டி.ஐ.ஜி. பீட்டர் வந்திருந்தார். அவர் சூலூர் விமானப் படைத் தளத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வீரப்பனைத் தேடிப்பிடிக்கும் பணியில் ஆயிரம் எல்லைப் பாதுகாப்பு படைவீரர்கள் ஈடுபடவுள்ளனர். இதன் முதல்கட்டமாகமணிப்பூரிலிருந்து 184 பேர் கோவை வந்து சேர்ந்துள்ளனர்.
மீதள்ள வீரர்கள் வரும் செவ்வாய், மற்றும் புதன்கிழமைகளில் வந்து சேர்கின்றனர். இந்தப் படையின் கமாண்டராக ஜார்ஜ் சாக்கோசெயல்படுவார்.
இரண்டு நாட்களுக்குள் எல்லைப் பாதுகாப்பு படையின் வீரர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அளிக்கப்படும். இதன்பின்னரே தேடுதல் வேட்டை துவங்கும். இங்கு வந்துள்ள படை வீரர்களுக்கு பல நவீன ஆயுதங்கள் மற்றும் யுக்திகள்வழங்கப்படும்.
உயிரினங்களில் இருந்து வெளியாகும் வெப்பத்தை அறியும் கருவி, இரவு நேரங்களில் ஆள் நடமாட்டத்தைக் காட்டும்பைனாகுலர் கருவி, வெடிகளைப் பொருத்தி வெடிக்கச் செய்யும் கருவிகள் ஆகியவை வழங்கப்படும்.
அஸ்ஸாம் காடுகளில் உறை பனி அதிகமாக இருக்கும். ஆனால், இங்கு பனி குறைவாகவே இருக்கிறது. இதனால், எளிதாக ஆள்நடமாட்டத்தை கண்டறிய முடியும். ஒரு நாளைக்கு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் 20 கிலோ மீட்டர் சுற்றளவில் தேடுதல்வேட்டையை நடத்த முடியும்.
தற்போது ரிமோட் சென்சிங் எனப்படும் செயற்கைக் கோள் மூல்மான கண்காணிப்பு ஏதும் தேவை இல்லை.
இந்த முறை நுண்ணறிவுப் பிரிவிற்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளோம். மேலும் கிராம மக்களின் நம்பகத் தன்மையைப்பொறுவதும் அவசியம். அஸ்ஸாம், மணிப்பூர் காடுகளில் உள்ள மக்களின் ஆதரவில் தான் எளிதாக வெற்றியைப் பெற முடிகிறது.
அரசு கேட்டுக் கொள்ளும் வரை வீரப்பனைப் பிடிக்க முகாமிடுவோம். கர்நாடக மற்றும் தமிழக அதிரடிப்படை வீரர்களின்ஒத்துழைப்பு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications