காளிமுத்துவைப் பார்க்க சென்னை விரைகிறார் ஜெ.
சென்னை:
மாரடைப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அதிமுக அவைத் தலைவர் காளிமுத்துவைப் பார்ப்பதற்காக ஹைதராபாத்திலிருந்துஜெயலலிதா செவ்வாய்க்கிழமை சென்னை வருகிறார்.
அ.தி.மு.க அவைத் தலைவர் காளிமுத்துக்கு திங்கள்கிழமை தீடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. நினைவிழந்த நிலையில் உடனடியாக அவர் அப்பல்லோமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காலையும், மதியம், இரண்டு தடவை காளிமுத்துவுக்கு ரத்த வாந்திஏற்பட்டது. வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது
48 மணி நேரத்திற்குப் பிறகுதான் காளித்துவின் உடல் நிலை குறித்து சொல்ல முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடல் நிலை தொடர்ந்துகவலைக்கிடமாகவே இருந்தது.
காளிமுத்துவின் குடும்ப டாக்டர் தேவராஜன் , இருதய நிபுணர் டாக்டர் நசீம் ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
செவ்வாய்க்கிழமை காலை அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. என்றாலும் அவர் தீவிர சிகிச்சை பிரிவிலேயேவைக்கப்பட்டுள்ளார். 24 மணி நேரம் டாக்டர்கள் அருகில் இருந்து அவரை கவனித்து வருகின்றனர்.
ஹைதராபாத்தில் இருக்கும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு இந்த தகவல் உடனடியாக தெரிவிக்கப்பட்டது.
அவர் உடனே டெலிபோனில் அப்பல்லோ டாக்டர்களுடன் பேசினார். காளிமுத்து உடல் நலம் பற்றியும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும்கேட்டறிந்தார். செவ்வாய்க்கிழமை காலையிலும் அவர் போன் மூலம் காளிமுத்துவின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
காளிமுத்துவை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரிப்பதற்காக செவ்வாய்க்கிழமை ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வருகிறார் ஜெயலலிதா.
த.மா.கா தலைவர் மூப்பனார், முன்னாள் அமைச்சர்கள் எஸ். ஆர்.பாலசுப்பிரமணியம் உள்பட பல கூட்டணிக் கட்சித் தலைவர்களும் காளிமுத்துவைமருத்துவமனையில் சென்று பார்த்து வந்தனர்.












Click it and Unblock the Notifications