மூப்பனார் தலைமையில் 3 வது அணி
திண்டுக்கல்:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் மூப்பனார் தலைமையில் 3 வது அணி ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று எம்.ஜி.ஆர்.அதிமுக பொதுச்செயலாளரும்,எம்.பி.யுமான திருநாவுக்கரசு கூறினார்.
அவர் திண்டுக்கல்லில் திங்கள்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
நாங்கள் அடுத்த தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இடம்பெறுவோம். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டநாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம்.
அதே சமயம் அயோத்தி விவகாரத்தை அரசியலாக்கி மத்திய அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் நினைத்தால் அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம்.
ஜெ. யின் பகல் கனவு:
அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று, தனித்தோ, கூட்டணி அமைத்தோ வெற்றி பெறலாம் என்று ஜயலலிதா பகல் கனவு காண்கிறார். அவரதுகனவு பலிக்காது. அது கானல் நீராகும்.
மூப்பனார் தலைமையில் 3 வது அணி:
தமிழகத்தில் மூப்பனார் தலைமையில் 3 வது அணி அமையும் வாய்ப்புக்கள் பிரகாசமாக உள்ளன. 3 வது அணியோ, 4 வது அணியோ எத்தனை அணிகள்வந்தாலும் நாங்கள் திமுக கூட்டணியில் தான் இடம் பெறுவோம்.
ஜெயலலிதாவை விட முதல்வர் கருணாநிதி தமிழகத்தில் நல்லாட்சி புரிந்து வருகிறார். ஜெயலலிதாவை, முதல்வர் கருணாநிதியுடன் ஒப்பிடத் தேவையில்லை என்றார்திருநாவுக்கரசு.












Click it and Unblock the Notifications