காம்ப்ளியிடம் வெளிநாட்டுப் பணம் திருட்டு

Subscribe to Oneindia Tamil

மும்பை:

கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி தனது பணம் கொள்ளையடிக்கப்பட்டது எனகொடுத்த புகாரின் அடிப்படையில், மும்பை போலீசார் வான்கடே விளையாட்டுஅரங்கில் இருக்கும் கார்வாரே விருந்தினர் இல்ல ஊழியர்களிடம் விசாரணைநடத்தினர்.

மும்பை மற்றும் குஜராத் கிரிக்கெட் அணிக்களுக்கு இடையே, மும்பை வான்கடேவிளையாட்டு அரங்கில் சில நாட்களுக்கு முன் ரஞ்சிக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிநடந்தது. அப்போது மும்பை வீரரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமானவினோத் காம்ப்ளி அங்குள்ள விருந்தினர் அறையில் தங்கி இருந்தார்.

போட்டியின் கடைசி நாளன்று அவரது அறையில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டுஅதிலிருந்த ரூ. 80,000 மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் மற்றும் சில அமெரிக்க வங்கிகாசோலைகள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து காம்ப்ளி போலீசில்புகார் செய்தார்.

விசாரணை நடத்திய போலீஸார், இந்தளவு வெளி நாட்டுப் பணத்தை ஏன் இங்குவைத்திருந்தார் என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு காம்ப்ளியிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

லாக்கரில், அதிக அளவில் வெளி நாட்டு பணத்தை வைத்திருந்த 2-வது இந்தியகிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. இதற்கு முன்பு, முன்னாள் கேப்டன் சுனில்காவஸ்கர் ஜிம்கானா விளையாட்டு அரங்கில் அதிக அளவு வெளிநாட்டுப் பணம்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+