கண்ணனுக்கு கரம் நீட்டுகிறது பா.ஜ.க.
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அமைச்சரவையிலிருந்து சமீபத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட முன்னாள்அமைச்சர் கண்ணன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர முன்வந்தால் அதைவரவேற்போம் என்று தமிழக பாரதீய ஜனதாக் கட்சி பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாண்டிச்சேரி, தேசியஜனநாயகக் கூட்டணியில் கண்ணன் சேர முன்வந்தால் அதை வரவேற்போம். அவர்சேர்ந்தால் கூட்டணிக்குப் புதிய பலம் கிடைக்கும். இருப்பினும் இதுவரை கண்ணன்சேருவது குறித்து எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
தனது எதிர்காலம் குறித்து கண்ணன் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றுதெரிகிறது. அவர் ஒரு மிகப் பெரிய சக்தி. அவர், காங்கிரஸ் அல்லது தமிழ் மாநிலகாங்கிரஸ் கூட்டணியில் சேருவார் என்று கூறுவதற்கில்லை.
கூட்டுறவுத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மீது கண்ணன் கூறிய புகார்கள் குறித்துமுதல்வர் சண்முகம் விசாரித்திருக்க வேண்டும். அதை விடுத்து டிஸ்மிஸ் செய்ததுதவறான முடிவு. இதன்மூலம் எதையோ மறைக்க வேண்டிய அவசரத்தில் முதல்வர்இருந்திருப்பாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications