ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை
வேலூர்:
வேலூர் மாவட்டம், ஆர்க்காடு வட்டம், மேச்சேரி என்ற கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலைசெய்து கொண்டனர். அவர்களது பிணங்கள், போலீஸாருக்குத் தெரியாமல் எரிக்கப்பட்டு விட்டன.
மேச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (50). இவரது மனைவி லலிதா (40). இவர்களுக்கு சத்யா (4),சத்தியமூர்த்தி (4) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தன. நீண்டகாலமாக லோகநாதன், உடல் நலம் சரியில்லாமல்இருந்து வந்தார். இந்த நிலையில், சித்தேரி என்ற கிராமத்தில் உள்ள ஏரி அருகே விஷம் குடித்து, குடும்பத்தோடுலோகநாதன் தற்கொலை செய்து கொண்டார்.
அவர்களது உடல்களை மீட்ட உறவினர்கள், போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்காமல் அவற்றை எரித்து விட முடிவுசெய்து, அதுபோலவே செய்து விட்டனர்.
தற்கொலைச் சம்பவம் குறித்து அறிந்த கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) செல்வராஜ் போலீஸில் புகார்கொடுத்தார்.
போலீஸார் விரைந்து வந்து 7 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications