துரிதகதியில் தடா கைதிகள் வழக்கு விசாரணை
பெங்களூர்:
மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் குறித்து, தடா வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விரைவில் விசாரணை நடத்தி வழக்கை முடிவுக்குக்கொண்டு வரும் என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் சந்திரே கவுடா புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்ட 121 பேர் மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 51 பேர் தடாசட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது தற்போது விசாரணை நடந்து வருகின்றது. தடா நீதிமன்றத்தில் ஊழியர்கள் பற்றாக்குறைவினால்தான் இவர்கள் மீது உடனடியாகவிசாரணை நடத்த முடியாமல் இருந்தது.
இதனால் ஓய்வுபெற்ற நீதித்துறை அலுவலர்களை கான்டிராக்ட் முறையில் பணியில் அமர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அந்தப் பணி முடிந்ததும் தினமும் தடாநீதிமன்றம் கூடி வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்கும் என்றார் சந்திரேகவுடா.












Click it and Unblock the Notifications