நெய்யில் கலப்படம் .. 6 பேர் கைது
கோவை:
அய்யப்பன் சீசனையொட்டி நெய்யில் கலப்படம் செய்து விற்பனை செய்த 6 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே தன்னாசியப்பன் கோயில் வீதியில் ஒரு தொழிற்சாலை செயல்பட்டு வருவதாகப்போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்று சோதனையிட்டனர்.
இந்த சோதனையில், 15 கிலோ அளவிலான வனஸ்பதி டின்கள் 68 இருந்தது. இந்த வனஸ்பதியுடன் கால் பகுதிஅளவு மட்டுமே நெய் கலந்து உருக்கி கலப்பட நெய்யை 6 பேர் சேர்ந்து தயாரித்துள்ளனர்.
பிராண்ட் இல்லாத இந்த நெய்யை கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர். குறைந்த விலைக்குநெய் கிடைப்பதாகக் கருதிய அய்யப்ப பக்தர்கள் இதனை வாங்கிப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த நெய் வியாபாரம் செய்து பணம் சம்பாதித்துள்ளனர். சிவகங்கை, புதுச்சேரி, மாத்தூர்ஆகிய ஊர்களைச் சேர்ந்த கதிரேசன் (23), முனியாண்டி, சந்தானம், நாச்சியப்பன், தென்னரசு ஆகியோர் இந்தநெய் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து இவர்களைப் போலீசார் கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications